Saturday, December 13, 2014

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்
உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல்,
தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது.
பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப்
பொருமல், குதவழிக் காற்றோட்டம்
போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.


* உடலைப் பருமடையச் செய்யவும்,
வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும்,
சுட்டை சமப்படுத்தவும், ரத்த
ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன்
அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும்
நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது.
இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம்
தேனில் குழைத்து சாப்பிட்டால்
வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப்
பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில
உறுப்புகளை விரைப்படையச்
செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர்
தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும்
அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால்
காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச்
சாப்பிட்டால் தொண்டை எரிச்சல்,
கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத்
தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன்
தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச்
சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும்
முன்பு சாப்பிட இரைப்பால் (asthma) ஏற்படும்
சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப்
போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில்
தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன்
கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம்,
பல்வலி ஆகியவை குணமாகும்.
கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில்
தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில்
ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த
எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம்
கிடைக்கும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்
ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில்
அரைத்து அந்தப் பசையைத் தடவினால்
தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள
நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம்
குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய
அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த
நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச்
சுவையூட்டவும், கறி மசாலா வகைகள்
தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத்
தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும்
இது பயன்படுகிறது.

No comments:

Post a Comment